சென்னை: கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கடந்த 8 மாதங்களில் 15 லட்சம் டன் பழைய கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அதன் மூலம் மீட்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகளை நட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சேகரமாகும் குப்பை கடந்த 40 ஆண்டுகளாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பை கிடங்கை சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.