இளையான்குடி: “கொலைச் சம்பவங்களில் பிஹாரை விட தமிழகம் மோசமாக மாறிவிட்டது,” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் நாம் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்று மன நிறைவு அடைந்து கொள்ளலாம். கடந்த ஆட்சியை விட திமுக ஆட்சி மோசமாக உள்ளது. தொடர்ந்து கொலைகள் நடைபெறுவதால் தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலமாக உள்ளது. பிஹாரில் தான் சாதாரணமாக கொலை நடந்து வந்தன. தற்போது தமிழகம் அதைவிட மோசமாகவிட்டது. போலீஸாருக்கு கூட பாதுகாப்பு இல்லை.