புதுடெல்லி: கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை பார்த்து முட்டை மற்றும் ஜூஸ் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் சுமன். முட்டை விற்பனையாளரான இவருக்கு வருமான வரித் துறை ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், ரூ.50 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளதாகவும் அதற்காக ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.