திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் கோடைக்காலத்தால் தண்ணீரின்றி வறண்டுள்ளதால், வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக டேங்கர்களில் தண்ணீர் கொண்டு சென்று வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணிகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு பகுதியில் 7,285 ஏக்கரிலும் மற்றும் திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் 7,360 ஏக்கர் பரப்பளவிலும் வனம் அமைந்துள்ளது. மலைகளின் இடையே உள்ள வனப்பகுதிகளில், சிறுத்தை, மான் இனங்கள், கழுதை புலி, நரி, மயில் உட்பட பல்வேறு விதமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கோடை தொடங்கியுள்ளதால் கிராமப்புற பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.