By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: கோயில் காவலாளி போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » கோயில் காவலாளி போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
பொதுவானவை

கோயில் காவலாளி போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

EDITOR
Last updated: July 1, 2025 7:32 pm
By EDITOR
4 Min Read
Share
SHARE

* தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்
* இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும், எங்கும், யாராலும் நடந்துவிடக் கூடாது

சென்னை: கோயில் காவலாளி அஜித் குமார் போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும், எங்கும், யாராலும் நடந்துவிடக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சிவகாமி (73). இவரது மகள் நிகிதா (48). இருவரும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட சென்றனர். கோயிலுக்கு வந்ததும் காரை கோயில் செக்யூரிட்டி அஜித்குமாரிடம் பார்க்கிங்கில் நிறுத்தும்படி கூறியுள்ளார்.

அவர் தனக்கு கார் ஓட்ட தெரியாது என்று கூறியவர் தனது நண்பரை வரவழைத்து காரை நிறுத்தியுள்ளார். பின்னர் சாமி தரிசனம் முடிந்து திரும்பியவர், காரில் உள்ள பையில் 10 சவரன் நகை இருந்ததை காணவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருப்புவனம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்தின் சிறப்பு தனிப்படை போலீசார் 6 பேர் சென்று காவலாளி அஜித்குமார், அவரது நண்பர் மற்றும் தம்பி ஆகியோரை அழைத்து விசாரித்துள்ளனர். பின்னர், அவர்களை அனுப்பிவிட்டு அஜித்குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது போலீசார் கோயிலுக்கு பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து அடித்துள்ளனர். அதில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அஜித்குமார் உயிரிழந்துள்ளார். போலீசார் அடித்ததில்தான் அஜித்குமார் இறந்தார் என்று தெரியவந்ததால், அவரை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 5 காவலர்களை கைது செய்தனர். வாகனம் ஓட்டியவர் மீது தவறு இல்லாததால் அவரை சஸ்பெண்ட் மட்டும் செய்தனர். இதற்கிடையே சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆசீஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். டிஎஸ்பி சண்முகசுந்தரம், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28.6.2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்கு காரணம் என்பதை அறிந்ததும் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லி தப்பிக்க முடியாத செயல்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாக சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது. நேற்று சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணை கண்காணிப்பளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்துக்கப்பட்டு வருகிறது.

துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமாரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு நான் பேசினேன். நடந்த துயரச் சம்பவத்திற்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையை தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிடுமாறு உத்தரவிட்டுள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும். காவல்துறையினர் தங்களது விசாரணையின்போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். இதுபோன்ற மீறல் சம்பவங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை.

திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது. இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன். தங்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்திடும் என நம்பி காவல்துறையை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் காவல்துறை எப்போதும் செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு தானாகவே முன்வந்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதற்கு, அஜித்குமாரின் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

* காவல்துறையினர் தங்களது விசாரணையின்போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன்
* தங்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்திடும் என நம்பி காவல்துறையை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றிடும் வகையில் காவல்துறை எப்போதும் செயல்பட வேண்டும்.

The post கோயில் காவலாளி போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை appeared first on Dinakaran.

You Might Also Like

பல்வேறு காரணங்களால் ஏர் இந்தியாவின் 6 சர்வதேச விமான சேவைகள் இன்று ஒரே நாளில் ரத்து

உதகை அருகே உள்ள பைக்காரா படகு இல்லம் நாளை, நாளை மறுநாள் மூடப்படுவதாக அறிவிப்பு

கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: சகாயம் விமர்சனம்

முக்கொம்பு காவிரி பாலத்தில் விலகிய தூண்: அதிகாரிகள் ஆய்வு

ஆகாஷ் தீப்: ஆர்டினரியா, அசாத்தியமா? – துயரத்தில் இருந்து எழுந்த பறவை!

Share This Article
Facebook Email Print
Previous Article விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: டேனியல் மேத்வதேவ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி
Next Article ‘நத்திங் போன் (3)’ இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க சட்டப்பேரவை சிறப்பு அமர்வு: உ.வாசுகி வலியுறுத்தல்
தமிழ்நாடு
தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கான ரூ.118 கோடி திட்ட வரைவு தயார்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
தமிழ்நாடு
பவானிசாகர் அணையிலிருந்து ஜூலை 31 முதல் தண்ணீர் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு
இழப்பீடு வழங்காததால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?