பெங்களூரு: கடந்த ஜூன் 4 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, ஆர்சிபி அணி நிர்வாகத்தை கர்நாடக அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், விராட் கோலியின் வீடியோ அழைப்பு இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 அன்று ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.