அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான தனது நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார்.
2018 முதல் கடந்த 2024 ஐபிஎல் சீசன் வரையில் அவர் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். அதன் மூலம் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். அந்த அணிக்காக 87 போட்டிகள் விளையாடி, 83 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்நிலையில், இந்த சீசனை முன்னிட்டு நடைபெற்ற மெகா ஏலத்துக்கு முன்னதாக அவர் ஆர்சிபி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.