சென்னை: சென்னையில் மழை வெள்ள நீரை சேமித்து குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில், கோவளம் அருகே 4375 ஏக்கர் பரப்பில் 1.6 டிஎம்சி கொள்ளளவில் ரூ.471 கோடியில் 6-வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத் துறை விண்ணப்பித்துள்ளது.
சென்னையின் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், அடிப்படையான குடிநீர் தேவையும் உயர்ந்து வருகிறது. தற்போதைய சூழலில் சென்னையில் தினசரி 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இதில் 350 மில்லியன் லிட்டர் குடிநீர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் பெறப்படுகிறது.