கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் தரையிறக்கப்பட்டது. கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக சென்றுள்ளது. நேற்று இரவு இண்டிகோ விமானம் கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு 8.15 மணிக்கு புறப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறால் இண்டிகோ விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கோவை திரும்பியது. அதில் இருந்த எரிபொருளை எரிப்பதற்காக கோயமுத்தூர் உள்ள வான்வெளியில் ஒரு மணி நேரம் சுற்றிய பின்னர் அந்த விமானம் பத்திரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பின்னர் கோவையில் இருந்து ஐதராபாத் செல்ல இருந்த விமானத்தில் பயணிகளை ஏற்றி சிங்கப்பூர் அனுப்பி வைத்தனர். தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட விமானத்தில் ஐதராபாத் பயணிகளை ஏற்றி கொண்டு மூன்று மணி நேரத்திற்கு மேலாக காலதாமதமாக விமானமனது சென்றது. நேற்றிரவு சிங்கப்பூர் சென்ற விமானம், இன்று காலை 9.15 மணிக்கு கோவை திரும்பியது. இதனால் காலை 8.40 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டு இருந்த ஹைதராபாத் விமானம் 10.15 மணிக்கு புறப்படும் என கூறப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமானதால் சிங்கப்பூருக்கு செல்கின்ற விமான பயணிகள் அவதி அடைந்தனர்.
The post கோவையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம்.. தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கம்: பயணிகள் கடும் அவதி!! appeared first on Dinakaran.