தங்க நகை பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், உக்கடத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ராஜவாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவு நீரில் கலந்திருக்கும் மிக சொற்பமான சேதார தங்கம்தான் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 20 குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.