கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கோவை பிரிவு அலுவலகத்தில் மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கோவையில் செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதில், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை பிரிவு தலைவர் ராஜேஷ் பி.லுந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை இருப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க அம்சமாகும். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இது தொழில் துறையை வலுப்படுத்த உதவும்.