கோவை: கோவை மாநகரில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் ஆகிய இடங்களில் உள்ள நகரப் பேருந்து நிலையங்களிலிருந்து கோவையின் பல்வேறு வழித்தடங்களில் 200-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.
இச்சூழலில், மாநகரில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் அரசு விதி முறைகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை எனவும், இதனால் அப்பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், சாலைகளில் செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.