கோவை: கோவையில் ஆடுகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த நிலையில் சிறிது நேரத்தில் உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.
கோவை, ஓணாபாளையத்தில் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி வந்தது. மீண்டும் ஆடுகள் அடைக்கப்பட்ட இடத்துக்கு சிறுத்தை வந்து சென்றது கேமரா மூலம் கண்டறியப்பட்ட நிலையில், திங்கள்கிழமை இரவு வனத்துறையினர் ‘ட்ராப் நெட்’ மூலம் சிறுத்தையைப் பிடித்தனர்.