கோவை: கோவையில் கடந்த 4 ஆண்டுகளில் 14,962 முறை யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். வனப்பகுதியில் பல்லுயிர் சூழலில் முக்கியப் பங்காற்றி வரும் யானைகள் நாளொன்றுக்கு 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் பயணித்து 250 கிலோ உணவு, 150 லிட்டர் தண்ணீர் அருந்தி வாழும் தன்மை உடையவை.
கூட்டமாக வாழும் சமூக விலங்கு அமைப்பைக் கொண்ட யானைகள் தங்களது குட்டியுடன் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி விளை நிலங்களில் பயிரிடப்படும் வாழை, தென்னைகளை சாப்பிட்டு, தங்களது உணவுப் பழக்கத்தை மாற்றி கொண்டுள்ளன. இதனால் மனித-விலங்கு முரண்பாடு சமீப காலமாக அதிகரித்துள்ளது.