கோவை: அரசு பேருந்தில் அமைக்கப்பட்ட விபத்து தடுப்பு கட்டமைப்பு பாதி அகற்றப்பட்ட நிலையில் இயக்கப்படுவதால் இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட நோக்கம் வீணாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சாலை விபத்து ஏற்படும் போது பேருந்து சக்கரங்களுக்கு இடையே உள்ள பகுதியில் மக்கள் விழுவதை தடுக்கும் நோக்கில் பேருந்துகளில் தடுப்பு போன்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளிலும் இக்கட்டமைப்பு அவசியம் ஏற்படுத்த வேண்டும் என காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.