கோவை: கோவை அருகே மின்வேலியை சிரமமப்பட்டு கடந்து சென்ற யானைகள் கூட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் இருந்து உணவு தேடி காட்டு யானைகள் வெளியேறி அருகிலுள்ள கிராமங்களில் நுழைவதும், வனத்துறையினர் அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் இரவு வெள்ளியங்கிரி அருகே உள்ள முள்ளங்காடு பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய இரண்டு பெண் யானைகள் இன்று (ஜூன் 11) காலை வனப்பகுதியை நோக்கி திரும்பிச் சென்றன. முள்ளங்காடு பகுதி அருகே இருந்த மின்வேலியை கடக்க முடியாமல் யானைகள் சிரமமப்பட்டன.