கோவை: கூலி உயர்வு தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரிப்பனவருடன் இன்று விசைத்தறியாளர்கள் சங்கத்தினர் சந்தித்து பேசினர்.
கூலி உயர்வு தொடர்பாக விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்திருந்தார். இன்று காலை கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிளியப்பனவருடன் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.