கோவை குற்றாலம் அருவியில் குளிக்க நாளை (வியாழக்கிழமை) வழக்கம் போல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருவிக்குச் செல்லும் சாலையின் சீரமைப்புப் பணிக்காக இன்று குற்றாலம் அருவி மூடப்பட்டது. சுமார் 2.8 கிலோ மீட்டர் தொலைவிற்கான சாலை சீரமைப்புப் பணிகள் இன்று நடைபெற்று நிறைவடைந்தன. இதையடுத்து நாளை முதல் சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை சிறுவாணி சாலை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோவை குற்றாலம் அருவி, கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு கோவை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில், கோவை குற்றாலம் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக பல்வேறு சீரமைப்பு பணிகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அருவிக்குச் செல்லும் சாலையின் சீரமைப்புப் பணிக்காக இன்று குற்றாலம் அருவி மூடப்பட்டது. சுமார் 2.8 கிலோ மீட்டர் தொலைவிற்கான சாலை சீரமைப்புப் பணிகள் இன்று நடைபெற்று நிறைவடைந்தன. இதையடுத்து நாளை முதல் சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post கோவை குற்றாலம் அருவியில் குளிக்க நாளை வழக்கம் போல அனுமதி! appeared first on Dinakaran.