கோவை :கோவை கோட்டத்தில் 22 பெண்கள் உட்பட 44 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர். கோவை கோட்டத்திற்கு 2024-25 நிதியாண்டில் 321 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக கோவை, உதகை, திருப்பூர் செல்லும் 13 புதிய பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். கோவை கோட்டம் அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக 22 பெண் நடத்துநர்கள் பணியில் சேர உள்ளனர்.
The post கோவை கோட்டத்தில் 22 பெண் நடத்துனர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்!! appeared first on Dinakaran.