புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 58 ரன்கள் தேவை. இந்த சூழலில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் அணியின் சக பவுலர்களின் செயல்பாட்டை பாராட்டி உள்ளார்.
“இது மாதிரியான மந்தமான ஆடுகளங்களில் பந்து வீச்சாளர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். நாங்கள் இந்த ஆடுகளத்தில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளோம். அனைத்து பந்து வீச்சாளர்களும் அபாரமாக செயல்பட்டனர். தொடர்ந்து நீண்ட நெடிய ஸ்பெல்களை வீசினர்.