புளோரிடா: சர்வதேச விண்வெளி மையத்தில் 286 நாட்கள் தங்கிய பிறகு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் மேலும் 2 விண்வெளி வீரர்களுடன் இணைந்து டிராகன்-9 விண்கலம் மூலம் நேற்று அதிகாலை பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.
நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் (59), புட்ச் வில்மோர் (62) ஆகியோர் கடந்தாண்டு ஜூன் 5-ம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சென்ற இவர்கள் 8 நாட்களுக்குப் பின், அதே விண்கலத்தில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. விண்வெளி மையத்துக்கு செல்லும்போது ஸ்டார்லைனர் விண்கலத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.