கல் குவாரி, மணல் குவாரி பஞ்சாயத்துகளில் பல உயிர்கள் பலியாகிக் கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில், வறுமை மீட்புக்காக வழங்கப்பட்ட கல் உடைப்பு உரிம விவகாரத்தை வைத்து தேனி மாவட்டத்திலும் அண்மையில் ஒரு கொலை நடந்திருக்கிறது.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு அமைந்துள்ளது. இதில், மூவாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் அதிகம் உள்ளன. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்களின் வறுமையை போக்கும் விதமாக இந்தக் கரட்டில் கல் உடைத்து வருவாய் ஈட்டிக் கொள்ள அரசே அனுமதி அளித்தது. இதற்காக இந்தக் கரட்டுப் பகுதியை ஆறு பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு குழுவினர் கற்களை வெட்டி எடுத்து விற்று வந்தனர்.