‘திடீரென எங்கிருந்து வந்தார் ஷுப்மன் கில்?’ என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பினார். ஆம்! ஆசியக் கோப்பைக்கான டி20 தொடர் இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை சூசகமாக முடிக்க, கம்பீரும் அகார்கரும் முடிவெடுத்து விட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
ஏன் சஞ்சு சாம்சன் பலிகடாவாக்கப்பட வேண்டும்? அதுவும் கில் தேர்வுக்கும் இதற்கும் என்ன தொடர்பு போன்ற கேள்விகள் எழலாம். ஆனால், லாஜிக் அதுதான். நிச்சயம் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பில்லை. முதல் தெரிவு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா என்று அகார்க்கர் கூறிவிட்டார். கில், அபிஷேக் சர்மா தொடங்க, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல் என்ற வரிசையில் நிச்சயம் சஞ்சுவுக்கு இடமில்லை.