சென்னை: சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.
தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் தாக்கல் செய் யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மக்க ளவை தேர்தல் நடைபெற்றதால், பிப்ரவரி 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதம் ஜனவரி 11-ம் தேதி வரை நடைபெற்றது. அன்று முதல்வர் ஸ்டாலின் பதில் உரை அளித்தார். அதன்பிறகு, தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.