சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்த முறை நன்கு யோசித்து நிதானமாக முடிவு எடுப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
இதுதொடர்பாக அவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட தகவலை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன். அது அந்த 2 கட்சியும் சேர்ந்து எடுத்த முடிவு. அதுபற்றி நாங்கள் எந்த கருத்தும் கூறமுடியாது. தேமுதிகவை பொறுத்தவரை ஏப்ரல் 30-ம் தேதி செயற்குழு-பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (நேற்று) நடைபெற்றது. அதற்காகவே நிர்வாகிகள் அலுவலகம் வந்துள்ளனர்.