செங்கல்பட்டு: சட்டமன்றத்தில் சபாநாயகர் எதிர்க்கட்சிகள் யாரையும் பேசவிடாமல் தடுக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டம் வழங்கும் பொதுக்கூட்டம் நேற்று செங்கல்பட்டில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்று பேசியதாவது: இன்றைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச துவங்கினால் மைக் கட் ஆகிறது. கவன ஈர்ப்பு தீர்மானம், ஒத்திவைப்பு தீர்மானம் என எதையும் கொண்டு வர முடியவில்லை.