புதுடெல்லி: மத்திய அரசின் அழைப்பின் பேரில் சண்டிகர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க தலைவர்களை பகவந்த் மான் அரசு கைது செய்தது சட்ட விரோதமானது என சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி .ஆர் .பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பஞ்சாப் மாநிலம், கணோரி பார்டரிலும், ஷம்பு எல்லையிலும் கடந்த 2024 பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்என்பி) சார்பில் டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.