சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் இன்று (மார்ச் 29, 2025) நடந்த மோதலில், பாதுகாப்புப் படையினர் 16 மாவோயிஸ்ட்டுகளை சுட்டுக் கொன்றனர். இந்த மோதலில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர்.
சுக்மா மாவட்டத்தின் கேரளபால் காவல் நிலையப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கை நேற்று தொடங்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “சுக்மா மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி), மத்திய ரிசர்வ் காவல் படையின் கூட்டுப் படையினர் ஆகியோர் இதில் ஈடுபட்டுள்ளனர்.