புதுடெல்லி: சத்தீஸ்கரில் நடைபெற்ற இருவேறு மோதல்களில் 22 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று நமது வீரர்கள் ‘நக்சலைட்டுகள் இல்லாத இந்தியா’ என்ற திசையில் மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். சத்தீஸ்கரில் உள்ள பிஜாப்பூர் மற்றும் கான்கரில் நமது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 22 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.