புதுடெல்லி: சத்தீஸ்கரில் 35 ஆண்டுகளாக வசித்து வந்த வங்கதேச தம்பதியினர், இந்தியாவை விட்டு தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து பிஎஸ்எப், வடக்கு வங்காள எல்லைப் பகுதிக்கான செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தின் தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டம் சாக்கோபால் என்ற கிராமத்துக்கு அருகில் வேலி இடப்படாத சர்வதேச எல்லையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்ற ஜைனப் என்ற பெண் பிடிபட்டார். விசாரணையில் வங்க தேசத்தை சேர்ந்த அவர் தனது கணவர் ஷேக் இம்ரானுடன் கடந்த 1990-ல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியது தெரியவந்தது.