சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் தண்டேவாடா – பீஜப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் – மாவோயிஸ்ட் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பிறகு 3 மாவோயிஸ்ட்களின் உடல்களை பாதுகாப்பு படையினர் அங்கிருந்து மீட்டனர். மேலும் ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களையும் கைப்பற்றினர்.