புதுடெல்லி: காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வருவதற்கு முன்பு தனது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
ராய்பூர் மற்றும் பிலாயில் உள்ள பூபேஷ் பாகலின் வீடுகளிலும், அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரியின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். என்றாலும் சிபிஐ தரப்பில் இந்தச் சோதனை குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. என்றாலும் மகாதேவ் ஆன்லைன் பந்தய செயலி தொடர்பாக இந்தச் சோதனை நடந்ததாக தகவல் அறிந்ததாகத் தெரிவித்தனர்.