சென்னை: தமிழகத்தில் சமரச தீர்வு மையம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கினர்.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அனைத்து மாவட்ட, தாலுகா அளவில் சமரச தீர்வு மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் சட்டப்பூர்வமாக, வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரையும் அழைத்து பேசி பரஸ்பரம் சுமுக தீர்வு காணப்பட்டு வருகிறது. இதற்காக, முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பலர் சமரச தீர்வாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.