புதுடெல்லி: ரம்ஜான் நோன்பு இன்று (மார்ச் 2) தொடங்கியுள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆசிர்வதிக்கப்பட்ட ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ள நிலையில் அது நம் சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்திக்கு அடையாளமாக இருக்கிறது. மேலும் இரக்கம், கருணை மற்றும் சேவை செய்யும் மனபான்மையை நமக்கு நினைவூட்டுகிறது.” என்று கூறியுள்ளார்.