ஓர் இளைஞர் தனது குழந்தையை பசுமாட்டின் மடியில் நேரடியாக பால் குடிக்கவைத்து, அதை ‘ரீல்’ (குறுகிய நேர காணொலி) எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை 9 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து, தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
பசு மாட்டின் மடியில் இருந்து வரும் பாலை நேரடியாக குடிக்க கூடாது; மிதமான வெப்பநிலையில் காய்ச்சிய பின்னரே குடிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரை. பச்சைப் பாலில் இ.கோலி, லிஸ்டீரியா, சால்மோனெல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. பால் காய்ச்சப்படும்போது இவை அழிந்துவிடும். அதன்பிறகே பால் குடிப்பதற்கு உகந்த உணவாக மாறும் என்பது மருத்துவர்களின் கருத்து.