சமூக வலைதளங்களில் அதிகரித்து வரும் நச்சுத்தன்மை குறித்து பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா கவலை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரீத்தி ஜிந்தா. இவர் கடந்த 2016 முதல் பாலிவுட் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் கடந்த 2016-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜீன் குட்இனஃப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2021-ல் வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார் பிரீத்தி. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளராக இருக்கிறார்.