சமோசா, ஜிலேபி, லட்டு போன்ற இந்திய மக்களால் அன்றாடம் விரும்பி உண்ணப்படும் உணவுகள் ஆரோக்கியமற்றவை என்றும், இதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்புகள் இந்த உணவுப் பொருட்களுடன் இணைத்து வெளியிடப்படும் என்று சமீபத்தில் வெளியான செய்தி, இவற்றை விரும்பி உண்ணும் மக்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த கலக்கத்தை ஏற்படுத்தியது.
சாலையோரம் விற்கப்படும் இந்திய உணவுப் பொருட்களை குறிவைத்து இத்தகைய தாக்குதல் நடத்தப்படுவதாக ஒருசாரார் விமர்சிக்கவும் தவறவில்லை. இச்செய்தி வெளியான மறுநாளே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில், மறுப்பு வெளியிடப்பட்டது.