விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சரசுவதி சட்டக் கல்லூரியில் தேசிய நியாய சன்ஹிதாவின் சட்ட அம்சங்கள் மற்றும் இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் தாக்கங்கள் குறித்த தேசிய மாநாடு இன்று நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் சட்ட கல்லூரியின் முதல்வர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ்குமார், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கௌரி இரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை கழக துணை வேந்தர் சந்தோஷ்குமார் பேசும்போது, ''இந்த தேசிய கருத்தரங்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு மிகவும் அருமையானது.