சென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சைவம், வைணவம், விலைமாதர்கள் என சர்ச்சையாக பேசிய நிலையில் அமைச்சர் பொன்முடி திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த பதவிக்கு திருச்சி சிவா எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சரான க.பொன்முடி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். மகளிர் இலவச பயணத் திட்டம் குறித்து ஓசி பஸ்லதானே போறீங்க என்று பேசியது, தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று கேட்ட பெண்ணிடம், ஓட்டு போட்டது குறித்து கேட்டது, பொது நிகழ்ச்சி ஒன்றில் பஞ்சாயத்து ஒன்றிய தலைவரிடம் சாதி குறித்து கேட்டது என அவர் மீதான சர்ச்சை பேச்சுகளின் பட்டியல் நீண்டது.