சென்னை: சளி, இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு, உடல் சோர்வுடன் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
தமிழகத்தில் காலநிலை மாற்றம் மழை உள்ளிட்ட காரணங்களால் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.