தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: