ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதன் மூலம் இந்த ஆட்டத்துக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது ஆர்சிபி.
ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13) அன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் ரன் சேர்க்க தடுமாறினார். 19 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.