பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டெவால்ட் பிரெவிஸ் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனது சர்ச்சை ஆகியுள்ளது. இது காரசாரமான விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில் விதி என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 52-வது லீக் ஆட்டத்தில் 2 ரன்களில் சிஎஸ்கே அணியை வென்றது ஆர்சிபி. 214 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே விரட்டியது. ஆயுஷ் மாத்ரே மற்றும் ஜடேஜா இடையிலான பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தது. இருப்பினும் இறுதி ஓவர்களில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக சிஎஸ்கே அணியால் வெற்றிக்கோட்டை கடக்க முடியவில்லை.