‘க்ரிஷ் 4’ திரைப்படம் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் இருந்து சித்தார்த் ஆனந்த் வெளியேறி இருக்கிறார்.
இந்திய திரையுலகில் ‘க்ரிஷ்’ படங்கள் மிகவும் பிரபலம். இதுவரை 3 பாகங்கள் வெளியாகியுள்ளது. இதன் 4-ம் பாகம் நீண்ட காலமாக பேச்சுவார்த்தையில் இருந்து, சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவானது. ஃபிலிம் க்ராப்ட் மற்றும் மார்பிலிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பது என திட்டமிடப்பட்டது.