சென்னை: சிதம்பரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். வெடி விபத்தில் லதாகுமாரி என்பவர் உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பெரியகுமட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
The post சிதம்பரம் அருகே வெடி விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.