மதுரை :”சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதி அளிப்பதற்கு என்ன திட்டம் உள்ளது?” என்று பொது தீட்சிதர்கள் தரப்பு அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனக சபையில் ஒரே வழியைப் பயன்படுத்துவதற்கு பதில், மற்றொரு வழியை அமைப்பது குறித்தும் விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் அறநிலையத்துறை கருத்து தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுவாமிக்கு நேர் எதிரில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறை வலியுறுத்தி உள்ளது.
The post சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதி அளிப்பதற்கு என்ன திட்டம் உள்ளது? : ஐகோர்ட் appeared first on Dinakaran.