சென்னை : சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்தது தொடர்பாக தீட்சிதர்களுகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023 ம் ஆண்டு ஜூன் மாதம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கி இருந்து. ஆனால் அரசின் உத்தரவை மீறி கனசபை மீது பக்தர்களை ஏற விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து கனசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுப்பதாக கூறி தீட்சிதர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா, சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பட்டு தீட்சிதர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற பட்டு தீட்சிதர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது, தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.
The post சிதம்பரம் நடராஜர் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது : உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.