கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு மைசூருவின் பிரதான இடத்தில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட இடத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் இதில் முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், அமலாக்கத்துறையும் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்தது.