ராமநாதபுரம் : ராமநாதபுரம் அடுத்த சித்தார்கோட்டையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சித்தார்கோட்டையில் நடந்த வாகன சோதனையின் போது 7 சாக்கு மூட்டையில் இருந்து கடல்குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடல் குதிரைகளை பறிமுதல் செய்த கடலோர காவல் குழும போலீசார், ஹபீப் என்பவரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சித்தார்கோட்டையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.