லண்டன்: முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரது அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2-2 என டிரா செய்தது.
லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 374 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 76.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. ஹாரி புரூக் 111, ஜோ ரூட் 105 ரன்கள் விளாசினர். ஜேமி ஸ்மித் 2, ஜேமி ஓவர்டன் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.